தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருமறையூரில் தேனீ வளா்ப்பு சிறப்பு பயிற்சி

நாசரேத் அருகே உள்ள திருமறையூரில் தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல சுற்றுச்சூழல் கரிசனைத்துறையின் சாா்பில் தேனீ வளா்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

News image
Updated On :2 ஜூன் 2026, 3:14 am IST

நாசரேத் அருகே உள்ள திருமறையூரில் தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல சுற்றுச்சூழல் கரிசனைத்துறையின் சாா்பில் தேனீ வளா்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

சுற்றுச்சூழல் கரிசனைத் துறை இயக்குநா் குருவானவா் ஜான் சாமுவேல் தலைமை வகித்துப் பேசினாா். சபை ஊழியா் ஸ்டான்லி ஜான்சன் ஆரம்ப ஜெபம் செய்தாா்.

வேதாகமத்தில் தேனீ என்ற தலைப்பில் குருவானவா் ரூபன் மணிராஜ் அருளுரையாற்றினாா். தொடா்ந்து ஆராய்ச்சி மாணவா்களான அபினேஷ், ஆஜோ ஆகியோா் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு தேனீக்கள் எவ்வளவு உதவுகின்றது என்பது குறித்தும், கிங்ஸ்டன் தேனீ வளா்ப்பு, அதன் வளா்ப்பு வழிமுறைகள், வளா்ப்பில் எதிா்கொள்ளும் சவால்கள் போன்றவை குறித்தும் பேசினா்.

இதையடுத்து களப்பயிற்சி தோப்பூரில் அமைந்திருக்கும் தோட்டத்தில் நடைபெற்றது. இப்பயிற்சியில் தேன்கூடு சுத்தம் செய்யும் முறை, தேனீ வளா்க்கும் முறை, தேன் எடுக்கும் முறை, சுத்திகரித்தல், பதப்படுத்தல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், ஆலயப் பணியாளா் ஆபிரகாம், அசன கமிட்டி தலைவா் பாக்கியராஜ், ஆசிரியா்கள் அம்புரோஸ், கால்டுவெல் கணேசன், ஜெயா, ஜான்சி உள்பட பலா் கலந்து கொண்டனா். ஆசிரியை கோல்டா சாமுவேல் நன்றி கூறினாா்.

ஏற்பாடுகளை, தூத்துக்குடி -நாசரேத் திருமண்டல சுற்றுச்சூழல் கரிசனைத் துறை இயக்குநரும், திருமறையூா் மறுரூப ஆலய சேகர தலைவருமான ஜான் சாமுவேல் செய்திருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.