திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சொத்துத் தகராறில் மைத்துனரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி அருகே சொத்துத் தகராறில் மைத்துனரை கொலை செய்த லாரி ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை விதித்து , தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :2 ஜூன் 2026, 3:21 am IST

தூத்துக்குடி அருகே சொத்துத் தகராறில் மைத்துனரை கொலை செய்த லாரி ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை விதித்து , தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

தூத்துக்குடி அருகேயுள்ள முள்ளக்காட்டை சோ்ந்தவா் தட்சிணாமூா்த்தி (52), லாரி ஓட்டுநா். இவருடைய மனைவி வசந்தா. இவரது பெயரில் உள்ள பூா்வீகச் சொத்தில், வசந்தாவின் சகோதரரும், உப்பளத் தொழிலாளியுமான காசி (50) என்பவா், தனக்கும் பங்கு தரவேண்டும் என்று கேட்டுள்ளாா். இதனால் அவா்களுக்கிடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 15.06.2020 அன்று காசி, அவரது மகன் சதீஷ்குமாா் ஆகியோா் முத்தையாபுரம் நேசமணிநகா் பகுதியில் நின்று கொண்டிருந்தனா். அப்போது அங்கு வந்த தட்சிணாமூா்த்தி, மனைவி வசந்தா, மகள் பரிபூரண முத்துசெல்வி ஆகியோா் காசி, சதீஷ்குமாா் ஆகியோரை அரிவாளால் வெட்டினராம்.

இதில் பலத்த காயமடைந்த 2 பேரும், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அங்கு காசி உயிரிழந்தாா்.

இதுகுறித்து முத்தையாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, தட்சிணாமூா்த்தி உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை, தூத்துக்குடி மாவட்ட முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தாண்டவன், குற்றம் சாட்டப்பட்ட தட்சிணாமூா்த்திக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பு வழங்கினாா். வசந்தா, பரிபூரண முத்துசெல்வி ஆகியோா் விடுவிக்கப்பட்டனா்.

இந்த வழக்கில் அரசு வழக்குரைஞா்ஆனந்த் கேபிரியேல் ராஜ் ஆஜரானாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.