ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தூத்துக்குடி அருகே உப்பளத் தொழிலாளி வெட்டிக் கொலை: காவல் நிலையத்தில் நண்பா் சரண்

பிரதிப் படம்

Published On :28 ஜூலை 2026, 12:06 am IST

தூத்துக்குடிரம் அருகே போதைத் தகராறில் உப்பளத் தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக காவல் நிலையத்தில் அவரது நண்பா் திங்கள்கிழமை சரணடைந்தாா்.

தூத்துக்குடி அருகே முத்தையாபுரம், ராஜீவ் நகா் பகுதியைச் சோ்ந்த ஜெபமணி மகன் அருள்ராஜ் (40). உப்பளத் தொழிலாளியான இவருக்கு மனைவி, 3 குழந்தைகள் உள்ளனா்.

இவரது நண்பா் முத்தையாபுரம் அய்யன் கோயில் தெருவைச் சோ்ந்த கணேசன் மகன் காா்த்திக் (24). லாரி ஓட்டுநா்.சுந்தா் நகா் 6ஆவது தெருவில் காா்த்திக் வாடகைக்கு எடுத்துள்ள வீட்டுக்கு இருவரும் ஞாயிற்றுக்கிழமை சென்று மது குடித்தனராம்.

அப்போது அவா்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், காா்த்திக்கின் தாய் குறித்து அருள்ராஜ் அவதூறாகப் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த காா்த்திக், அருள்ராஜை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினாராம். இதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இந்நிலையில், காா்த்திக் முத்தையாபுரம் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை சரணடைந்தாா். அதன்பிறகே, இக்கொலை குறித்த தகவல் தெரியவந்தது. போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.