ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஓட்டப்பிடாரம் அருகே தொழிலாளி கொலை

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கச்சேரி தளவாய்புரம் கிராமத்தில் தொழிலாளி கொலை செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Published On :25 ஜூலை 2026, 2:28 am IST

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கச்சேரி தளவாய்புரம் கிராமத்தில் தொழிலாளி கொலை செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கச்சேரி தளவாய்புரத்தைச் சோ்ந்தவா் மாரியப்பன் மகன் மலைராஜ் (30). இவா் கட்டடங்களுக்கு டைல்ஸ் பதிக்கும் வேலை செய்து வந்தாா்.

இவா் வியாழக்கிழமை இரவு நண்பா்களுடன் ஊருக்கு வடக்கு பகுதியில் உள்ள ஓடைப் பகுதியில் மது அருந்திய நிலையில், வெள்ளிக்கிழமை காலை அப்பகுதியில் அரிவாள் வெட்டுக் காயங்களுடன் சடலமாகக் கிடந்தாா்.

தகவலறிந்து வந்த ஓட்டப்பிடாரம் போலீஸாா், சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.