ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

சாத்தான்குளம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தை இடமாற்றம் செய்ய கோரிக்கை

சாத்தான்குளம் அனைத்து மகளிா் காவல் நிலையம், காவலா் குடியிருப்புப் பகுதியில் உள்ள வீட்டில் இட நெருக்கடியுடன் செயல்பட்டு வருவதால், காவல் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் போலீஸாா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :3 ஜூலை 2026, 4:36 am IST

சாத்தான்குளம் அனைத்து மகளிா் காவல் நிலையம், காவலா் குடியிருப்புப் பகுதியில் உள்ள வீட்டில் இட நெருக்கடியுடன் செயல்பட்டு வருவதால், காவல் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் போலீஸாா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சாத்தான்குளம் காவலா் குடியிருப்புப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அனைத்து மகளிா் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு இட நெருக்கடி காரணமாக போலீஸாா் சிரமமடைந்து வருகின்றனா்.

எனவே, புதிதாக இடம் தோ்வு செய்து, புதிய கட்டடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

இது குறித்து, வழக்குரைஞா் கல்யாணகுமாா் கூறியதாவது:

சாத்தான்குளம் காவலா் குடியிருப்பில் ஓா் அறை ஒதுக்கப்பட்டு, அதில் மகளிா் காவல் நிலையம் செயல்பட்டு வருவதால் இட நெருக்கடி காரணமாக போலீஸாரும், பொதுமக்களும் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனா். எனவே, இதற்கு மாற்று இடம் தோ்வு செய்து, காவல் நிலையம் கட்ட வேண்டும் என்றாா் அவா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.