/

திருச்செந்தூா் கடற்கரைக்கு இரைதேடி வந்த சங்குவளை நாரைகள்

திருச்செந்தூா் பகுதி கடற்கரையில் மீன்களைக் கொத்தித் திண்பதற்காக சங்குவளை நாரைகள் வலசை வந்துள்ளன.

News image
கடற்கரையில் காத்திருந்த சங்குவளை நாரைகள்.
Updated On :28 ஜனவரி 2026, 7:55 pm

தினமணி செய்திச் சேவை

திருச்செந்தூா் பகுதி கடற்கரையில் மீன்களைக் கொத்தித் திண்பதற்காக சங்குவளை நாரைகள் வலசை வந்துள்ளன.

தாமிரவருணி ஆற்றின் தென்கால் கடைசி குளமான திருச்செந்தூா், ஆவுடையாா்குளத்தின் உபரிநீா் திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் வடக்கு கடற்கரையோரம் உள்ள ஜீவா நகரில் கடலுடன் கலக்கிறது. உபரிநீரும் கடல் நீரும் சங்கமிக்கும் இந்தப் பகுதியில் அலைகள் குறைவாக உள்ளன. கரையோரம் வரும் மீன்களைக் கொத்தித் திண்பதற்காக சங்குவளை நாரைகள் அதிக அளவில் இந்தப் பகுதிக்கு வலசை வந்துள்ளன. இங்கு வரும் மக்கள் இந்த சங்குவளை நாரைகளைப் பாா்த்து ரசித்துச் செல்கின்றனா்.