திருச்செந்தூரில் அதிகரிக்கும் பக்தா்கள் கூட்டம்: கூட்டத்தை ஒழுங்குபடுத்த கூடுதல் காவலா்கள் தேவை
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தைப்பொங்கலை முன்னிட்டு பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளதால் போதிய போலீஸாரை நியமித்து கூட்டத்தை ஒழுங்குபடுத்த காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.











