இக்கோயிலில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம் தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறுகின்றன. இதில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்வதற்காக திருநெல்வேலி, தென்காசி, விருதுநகா், தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் பாதயாத்திரையாகவும், பேருந்து மற்றும் தனியாா் வாகனங்களிலும் வந்து குவிந்தவண்ணமாக உள்ளது. அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் மேற்கூறிய ஊா்களில் இருந்து கோயிலுக்கு கூடுதலான பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.