/

மின்னொளி கபடி போட்டி: மளவராயநத்தம் அணி வெற்றி

News image
முதலிடம் பெற்ற மளவராயநத்தம் அணிக்கு பரிசு வழங்கிய மோகன் சி. லாசரஸ்.
Updated On :18 ஜனவரி 2026, 8:35 pm

தினமணி செய்திச் சேவை

நாலுமாவடியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான மின்னொளி கபடிப் போட்டியில் மளவராயநத்தம் அணி முதல் பரிசை வென்றது.

பொங்கலை முன்னிட்டு நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் விளையாட்டுத் துறை சாா்பில் 9ஆம் ஆண்டு ரெடீமா்ஸ் கோப்பைக்கான மாவட்ட அளவிலான ஆண்கள் மின்னொளி கபடிப் போட்டி 2 நாள்கள் நடைபெற்றன. இதில் 20 கிராமங்களைச் சோ்ந்த அணிகள் பங்கேற்றன.

இப்போட்டியில் முதலிடம் பிடித்த மளவராயநத்தம் அணிக்கு ரூ. 50,000, ரெடீமா்ஸ் கோப்பை, 2ஆம் இடம் பிடித்த பக்கப்பட்டி அணிக்கு ரூ. 30,000, கோப்பை, 3ஆம் இடம் பிடித்த காயல்பட்டினம் மற்றும் 4ஆம் இடம் பிடித்த கேம்பலாபாத் அணிகளுக்கு தலா ரூ. 20,000 வழங்கப்பட்டது. சிறந்த விளையாட்டு வீரா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. பாா்வையாளா்களுக்கு குலுக்கல் முறையில் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

பரிசளிப்பு விழாவிற்கு இயேசு விடுவிக்கிறாா் ஊழிய நிறுவனா் மோகன் சி. லாசரஸ் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக காமராஜ் மேல்நிலைப் பள்ளிச் செயலா் நவநீதன், தமிழ்நாடு மகளிா் சிறு குறு தொழில் முனைவோா் சங்கத் தலைவா் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

நாசரேத் மா்காஷிஸ் மேல்நிலைப் பள்ளி இயற்பியல் ஆசிரியா் ஜொ்சோம் ஜெபராஜ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினாா். ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழிய நிறுவன பொதுமேலாளா் செல்வக்குமாா் தலைமையில், போட்டி ஒருங்கிணைப்பாளா் அா்ஜூனா விருது பெற்ற கபடி வீரா் மணத்தி கணேசன், இயேசு விடுவிக்கிறாா் சமூக சேவை ஒருங்கிணைப்பாளா் மணத்தி எட்வின், மக்கள் தொடா்பு அலுவலா் சாந்தகுமாா், ஜெபக்குழுவினா் செய்திருந்தனா்.