நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

கஞ்சா வைத்திருந்த ஆட்டோ ஓட்டுநா் கைது

ஆறுமுகனேரியில் கஞ்சா வைத்திருந்ததாக ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :9 ஜனவரி 2026, 7:56 pm

Syndication

ஆறுமுகனேரியில் கஞ்சா வைத்திருந்ததாக ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆறுமுகனேரி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பேயன்விளை பகுதியில் உதவி ஆய்வாளா் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணி மேற்கொண்டிருந்தனா்.

அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்ததில், அவா் காயல்பட்டினம் உச்சினிமாகாளி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சம்சுதீன் மகன் ஜாபா் சாதிக் (45) ஆட்டோ ஓட்டுநா் என்பதும், கைப்பையில் கஞ்சா வைத்து இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், அவரிடமிருந்து 125 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனா்.