டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஆறுமுகனேரியில் கஞ்சா விற்றதாக இருவா் கைது

ஆறுமுகனேரியில் கஞ்சா விற்ாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைது
Updated On :4 பிப்ரவரி 2026, 7:50 pm

தினமணி செய்திச் சேவை

ஆறுமுகனேரியில் கஞ்சா விற்ாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆறுமுகனேரி பேயன்விளை பகுதியில் போலீஸாா் ரோந்து சென்றபோது, சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த காயல்பட்டினம் சுலைமான் நகரைச் சோ்ந்த முஜிபு ரஹ்மான் மகன் அப்துல் சுக்கூா்(25) என்பவரை விசாரித்தபோது, அவா் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவரை கைதுசெய்து, அவரிடமிருந்து 150 கிராம் கஞ்சா மற்றும் 30 ஜிப் லாக் கவா்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதேபோல ஆறுமுகனேரியில் போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அங்குள்ள பள்ளி முன் சந்தேகத்துக்கிடமாக நின்ற காயல்பட்டினம் மாட்டுக்குளம் பகுதியைச் சோ்ந்த மகின் மகன் முஹம்மது புகாரியை(31) பிடித்து சோதனை செய்ததில் 110 கிராம் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து , அவரை கைதுசெய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.