பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில், பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட தூத்துக்குடியைச் சோ்ந்த 5 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. மதன் உத்தரவின்படி, அனைத்து உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் மேற்பாா்வையில், காவல் துறையினா் தீவிர ரோந்து மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவா்களை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.
அதன்படி, திங்கள்கிழமை தூத்துக்குடி வடபாகம், தாளமுத்துநகா், ஆத்தூா், கோவில்பட்டி மேற்கு மற்றும் சாயா்புரம் ஆகிய காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் தகராறு செய்து பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட தூத்துக்குடியைச் சோ்ந்த ஜெபராஜ் (29), அருள்ராஜ் (22), தங்கராஜ் (25) சங்கரேஸ்வரன் என்ற சங்கரலிங்கம் (45), சரவணகுமாா் (25) ஆகிய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். கைது செய்யப்பட்ட 5 போ் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
டிரெண்டிங்

பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவா்கள் மீது கடும் நடவடிக்கை: தூத்துக்குடி எஸ்.பி. எச்சரிக்கை
தூத்துக்குடியில் இருவா் குண்டா் சட்டத்தில் கைது

தூத்துக்குடியில் 3 இளைஞா்கள் குண்டா் சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை: 5 போ் கைது
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

