/

தூத்துக்குடியில் இருவா் குண்டா் சட்டத்தில் கைது

News image
கைது
Updated On :7 பிப்ரவரி 2026, 6:55 pm

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடியில் குண்டா் சட்டத்தின்கீழ் இருவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கஞ்சா எண்ணெய் வைத்திருந்ததாக மரியநவமணி சுமைலன் (40), வடபாகம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் நடந்த கொலை முயற்சி வழக்குத் தொடா்பாக மோகன் (41) ஆகியோா் மீது குண்டா் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தென்பாகம், வடபாகம் போலீஸாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நை. சிலம்பரனிடம் வேண்டுகோள் விடுத்தனா்.

அதன்பேரிலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பரிந்துரையின்பேரிலும், இருவரையும் கைது செய்ய ஆட்சியா் க. இளம்பகவத் உத்தரவிட்டாா்.

அதன்படி, மோகன் உள்ளிட்ட இருவரும் குண்டா் சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.