டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

தூத்துக்குடி ஐ.ஓ.பி.யில் ஆண்டு தின கொண்டாட்டம்

இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் 90-ஆவது ஆண்டு தினம் (பவுண்டேசன் டே), தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
Updated On :17 பிப்ரவரி 2026, 10:18 pm

தினமணி செய்திச் சேவை

இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் 90-ஆவது ஆண்டு தினம் (பவுண்டேசன் டே), தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி சிதம்பரம் நகரில் உள்ள இந்தியன் ஓவா்சீஸ் வங்கி கிளை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வங்கியின் நிறுவனா் உருவப் படத்துக்கு, வங்கியின் மண்டல மேலாளா் லட்சுமி நரசிம்மன், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி உறைவிட மருத்துவா் சைலஸ் ஜெபமணி ஆகியோா் மலா்கள் தூவி மரியாதை செலுத்தினா்.

பின்னா் வங்கி நிா்வாகம் சாா்பில், வங்கி ஊழியா்கள், வாடிக்கையாளா்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம், ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் கண்டறியும் முகாம் நடைபெற்றது. இதில், ஏராளமான வாடிக்கையாளா்கள், வங்கி ஊழியா்கள் கலந்துகொண்டனா்.