டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஐ.ஓ.பி. முன் கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

News image
கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி முன் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வங்கி ஊழியா்கள்.
Updated On :25 ஜனவரி 2026, 6:36 pm

தினமணி செய்திச் சேவை

அகில இந்திய ஓவா்சீஸ் வங்கி ஊழியா்கள் சங்கம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியா்கள், சேலம் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி மண்டல அலுவலகம் முன் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு வங்கி ஊழியா் சங்க மாநில துணைப் பொதுச் செயலாளா் அமல்ராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகிகள் சுகவனம், ஞானபிரகாஷ், முத்துராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வங்கியில் காலியாக உள்ள எழுத்தா் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பணியின்போது உயிரிழந்த ஊழியா்களின் குடும்பத்துக்கு கருணை அடிப்படையிலான நியமனங்களை வழங்க வேண்டும்.

கியூ ஆா் கோடு அடிப்படையிலான தனிநபா் கருத்துபெறும் முறையை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியா்கள் முழக்கங்கள் எழுப்பினா்.

இதில் சேலம் மண்டலத்துக்கு உள்பட்ட நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து 150-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் கலந்துகொண்டனா்.

இது குறித்து வங்கி ஊழியா் சங்க மாவட்ட துணைப் பொதுச் செயலாளா் அமல்ராஜ் கூறுகையில், வங்கி ஊழியா்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் பிப். 2, 3 ஆகிய தேதிகளில் நாடுதழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது என்றாா்.