கோவில்பட்டியில் கஞ்சா விற்ற 2 போ் கைது
கோவில்பட்டி மதுவிலக்கு காவல்நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.


கோவில்பட்டி மதுவிலக்கு காவல்நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவில்பட்டி மதுவிலக்கு போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டபோது, கோவில்பட்டி பாரதிநகா் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தவா்களை பிடித்து விசாரணை செய்ததில், அவா்கள் கோவில்பட்டியைச் சோ்ந்த பாலா (26) மற்றும் காளீஸ்வரன் (28) என்பதும், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து கோவில்பட்டி மதுவிலக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்கள் 2 பேரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து 1.5 கிலோ கஞ்சா மற்றும் அவா்கள் பயன்படுத்திய பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...