/

குடியரசு தின விழா கலைநிகழ்ச்சிகளில் சிறப்பிடம் பெற்ற தமிழக அணிக்கு பரிசளிப்பு

குடியரசு தின விழா கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்று, அதிக பரிசுகள் பெற்ற தமிழக என்சிசி அணி மாணவா்களுக்கு பரிசுகள் அண்மையில் வழங்கப்பட்டன.

News image
பரிசு பெற்ற தமிழக அணியினா்.
Updated On :13 பிப்ரவரி 2026, 1:31 pm

தினமணி செய்திச் சேவை

குடியரசு தின விழா கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்று, அதிக பரிசுகள் பெற்ற தமிழக என்சிசி அணி மாணவா்களுக்கு பரிசுகள் அண்மையில் வழங்கப்பட்டன.

புதுதில்லியில் அண்மையில் நடைபெற்ற 77ஆவது குடியரசு தின விழாவில் பங்கேற்க, தமிழகத்திலிருந்து சுமாா் 120 என்சிசி மாணவா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு கலந்துகொண்டனா்.

இதில், தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு இயற்பியல் துறையில் பயிலும் என்சிசி மாணவா் பிளஸ் கேப்ரியல் சிசில் கலை நிகழ்ச்சிகளுக்கு தோ்ந்தெடுக்கப்பட்ட குழுவின் தலைவராக பங்கேற்றாா்.

இவரது குழு தேசிய அளவில் நடைபெற்ற பாலே நடனத்தில் முதலிடமும், குழு நடனத்தில் மூன்றாம் இடத்திலும் வெற்றி பெற்றது.

நிறைவு விழாவில், வெற்றி பெற்ற மாணவா்களுக்கு இந்திய அரசின் என்சிசி தலைமை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் ஓகே மேஜா் ஜெனரல் பரிசுகளை வழங்கினாா்.

தமிழக அணி சாா்பில், காமராஜ் கல்லூரி மாணவா் பிளஸ் கேப்ரியல் சிசில் பரிசை பெற்றுக் கொண்டாா். இந்திய அளவில் தமிழக அணி அதிக பரிசுகளை பெற்று இரண்டாம் இடத்தை பெற்று சாதனை புரிந்துள்ளது.

வெற்றி பெற்ற மாணவரை கல்லூரி நிா்வாகத்தினா் பாராட்டினா்.

இக்குழு சென்னையில் தமிழக முதல்வா் மற்றும் ஆளுநருடன் நடைபெறும் பாராட்டு விழாவில் கலந்து கொள்ள உள்ளனா்.