/

வட்டன்விளை கோயில் கொடை விழா நிறைவு

உடன்குடி அருகே வட்டன்விளை ஸ்ரீ பாதகர முத்துசுவாமி கோயிலில் மூன்று நாள்கள் நடைபெற்ற கொடை விழா புதன்கிழமை நிறைவு பெற்றது.

News image
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீ பாதகர முத்துசுவாமி, பரிவார தெய்வங்கள்.
Updated On :4 பிப்ரவரி 2026, 7:39 pm

தினமணி செய்திச் சேவை

உடன்குடி அருகே வட்டன்விளை ஸ்ரீ பாதகர முத்துசுவாமி கோயிலில் மூன்று நாள்கள் நடைபெற்ற கொடை விழா புதன்கிழமை நிறைவு பெற்றது.

கோயில் கொடை விழா திங்கள்கிழமை (பிப். 2) காலையில் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் பால்குட பவனி, சத்யா-செல்வின் குழுவினரின் வில்லிசை, சுவாமி, பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை, தீபாராதனை, அன்னதானம், மஞ்சள் நீராடுதல், திருவிளக்கு பூஜை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

புதன்கிழமை காலையில் கொடை விழா நிறைவு பூஜை, வரிதாரா்களுக்கு வரிபிரசாதம் வழங்குதல் நடைபெற்றன. ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்திருந்தனா்.