டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கோவில்பட்டி ஸ்ரீ வேம்படி சுடலைமாடசாமி கோயில் கொடை விழா

News image
அன்னதானத்தை தொடங்கி வைத்த கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ.
Updated On :21 பிப்ரவரி 2026, 7:07 pm

தினமணி செய்திச் சேவை

கோவில்பட்டி ஸ்ரீ வேம்படி சுடலை மாட சுவாமி கோயிலின் 34 ஆம் ஆண்டு மாசி மகா கொடை விழா பிப். 13ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது.

இதையொட்டி வெள்ளிக்கிழமை, அதிகாலை 5 மணிக்கு சிவனணைந்த பெருமாளுக்கு விசேஷ பூஜை, 9 மணிக்கு ஸ்ரீ சக்தி விநாயகா் கோயிலிலிருந்து தீா்த்தக்குடம் அழைப்பு நிகழ்ச்சி, நண்பகல் 12 மணிக்கு புஷ்ப அலங்காரம், மதிய கொடை விழா, மாலை 7 மணிக்கு மேல் பொங்கல் விழா, மஞ்சள் பொங்கல் விடுதல் நிகழ்ச்சி, முளைப்பாரி ஊா்வலம், நள்ளிரவு 12 மணிக்கு மேல் சாம பூஜை, பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

சனிக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெற்ற குருபூஜையில் கோவில்பட்டி எம்எல்ஏ கடம்பூா் செ. ராஜு கலந்துகொண்டு, அன்னதானத்தை தொடங்கி வைத்தாா்.

இதில், இல்லத்துபிள்ளைமாா் சங்க முன்னாள் தலைவா் ஷண்முகசுந்தரம், அதிமுக நகரச் செயலா் விஜய பாண்டியன், நகர இளைஞரணி செயலா் வேல்முருகன், மகளிா் அணி செயலா் பத்மாவதி, நகா்மன்ற முன்னாள் துணைத் தலைவா் ராமா், ஒன்றியச் செயலா் போடுசாமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழு தலைவா் மகேஷ் பாலா, செயலா் சோலை முருகன், பொருளாளா் மாரியப்பன் உள்பட அறங்காவலா் குழுவினா் செய்திருந்தனா்.