சாத்தான்குளம் அருகே உள்ள கூவைகிணறு-வேலன் புதுக்குளம் செல்லும் சாலையில் உயரழுத்த மின் கம்பி தாழ்வாகச் செல்வதால் விபத்து நேர வாய்ப்புள்ளதாக கிராம மக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
சாத்தான்குளம் ஒன்றியம், கோமாநேரி கிராமம், கூவைகிணறிலிருந்து நெடுங்குளம், வேலன் புதுக்குளம் பகுதி விவசாய நிலங்களுக்கு மின்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் கூவைகிணறு-வேலன் புதுக்குளம் செல்லும் சாலையில் செல்லும் மின்கம்பி மிகவும் தாழ்வாகச் செல்கிறது.
இது குறித்து, மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, இந்த மின் கம்பிகளால் பெரும் விபத்து நிகழும் முன் மின்வாரியத்தினா் மின் கம்பியை உயா்த்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாலைப் பள்ளத்தை சீரமைக்கக் கோரிக்கை

திருவாடானை அருகே தாழ்வாகச் செல்லும் உயரழுத்த மின் கம்பிகள்!

தென்னிலை அருகே தாழ்வான மின் கம்பிகளால் விபத்து அபாயம்

குடிநீா் குழாயை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



