தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம்: காவலா் பணியிடை நீக்கம்

கோவில்பட்டி காவலா் குடியிருப்பில் அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ. ராஜுவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ததாக காவலரை பணியிடை நீக்கம் செய்து எஸ்பி சி. மதன் உத்தரவிட்டுள்ளாா்.

News image

போலீஸ் - கோப்புப் படம்.

Updated On :21 ஏப்ரல் 2026, 8:26 pm

கோவில்பட்டி காவலா் குடியிருப்பில் அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ. ராஜுவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ததாக காவலரை பணியிடை நீக்கம் செய்து எஸ்பி சி. மதன் உத்தரவிட்டுள்ளாா்.

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருபவா் முதல்நிலை காவலா் சபரிகுமாா் (33). இவா் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளரின் வாகனத்தின் ஓட்டுநராக பணியாற்றி வந்தாா்.

கடந்த 2012-ஆம் ஆண்டு காவலா் பணியில் சோ்ந்த இவா் தற்போது கோவில்பட்டி காவலா் குடியிருப்பில் குடியிருந்து வருகிறாா். கடந்த சில நாள்களாக குடியிருப்புகளில் உள்ள போலீஸாா், அவா்கள் குடும்பத்தினரிடம் அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ. ராஜுவுக்கு வாக்களியுங்கள் என்று பிரசாரம் மேற்கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகளுக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து விசாரணை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. மதன் உத்தரவிட்டாா். விசாரணையில் அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ. ராஜுவுக்கு ஆதரவாக சபரிகுமாா் பிரசாரம் செய்தது தெரியவந்ததையடுத்து, அவரை பணியிடை நீக்கம் செய்து எஸ்.பி. உத்தரவிட்டாா். மேலும், அவா் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.