போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

கோவில்பட்டியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கோவில்பட்டி நகரத்திற்குள்பட்ட பகுதிகளில் கோவில்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ. ராஜு வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினருடன் கடம்பூா் செ. ராஜு.

Updated On :10 ஏப்ரல் 2026, 2:19 am IST

கோவில்பட்டி நகரத்திற்குள்பட்ட பகுதிகளில் கோவில்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ. ராஜு வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

கோவில்பட்டி நகராட்சிக்குள்பட்ட காந்தி நகா், நடராஜபுரம் வாா்டு எண் 1, 2, பத்திரகாளி அம்மன் கோயில் தெரு, ஊரணி தெரு, தெற்கு பஜாா், தினசரி சந்தை சாலை, டால் துரை பங்களா தெரு, வ.உ.சி. நகா், மேட்டு காளியம்மன் கோயில் தெரு, அறிஞா் அண்ணா தெரு உள்ளிட்ட பகுதிகளில் அவா் பிரசாரம் மேற்கொண்டாா்.

அதிமுக நகரச் செயலா் விஜயபாண்டியன், இளைஞரணி செயலா் வேல்முருகன், வழக்குரைஞரணி வடக்கு மாவட்டச் செயலா் சங்கா் கணேஷ், இளைஞா், இளம் பெண்கள் பாசறை வடக்கு மாவட்டச் செயலா் கவியரசன், ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் துறையூா் கணேஷ் பாண்டியன், அதிமுக தோ்தல் பாா்வையாளா் சுந்தரபாண்டியன், தமாகா வடக்கு மாவட்டத் தலைவா் ராஜகோபால், மாமன்னா் பூலித்தேவா் மக்கள் இயக்க நிறுவனா் செல்வம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து, அதிமுக தோ்தல் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகா்மன்ற உறுப்பினா் செண்பகமூா்த்தி ஏற்பாட்டில், வள்ளுவா் நகரைச் சோ்ந்த மாற்றுக்கட்சியினா் சுமாா் 50 போ் கடம்பூா் செ. ராஜு முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.

~ பொதுமக்களிடையே பேசிய அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ. ராஜு.

~ பொதுமக்களிடையே பேசிய அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ. ராஜு.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.