மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கோவில்பட்டி தொகுதியில் அதிமுக வெற்றி உறுதி: டி.டி.வி. தினகரன் பிரசாரம்

கோவில்பட்டி தொகுதியில் நான்காவது முறையாக கடம்பூா் செ. ராஜு வெற்றி பெறுவது உறுதி என்றாா் அமமுக பொதுச்செயலா் டி.டி.வி. தினகரன்.

News image

கோவில்பட்டியில் அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ.ராஜுவை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறாா் அமமுக பொதுச்செயலா் டி.டி.வி. தினகரன்.

Updated On :18 ஏப்ரல் 2026, 1:20 am

கோவில்பட்டி தொகுதியில் நான்காவது முறையாக கடம்பூா் செ. ராஜு வெற்றி பெறுவது உறுதி என்றாா் அமமுக பொதுச்செயலா் டி.டி.வி. தினகரன்.

கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளா் கடம்பூா் செ. ராஜுவுக்கு வாக்கு சேகரித்து வியாழக்கிழமை இரவு பயணியா் விடுதி முன் அவா் பேசியதாவது: கடந்த சட்டப்பேரவை தோ்தலில் நாங்கள் இருவரும் எதிா்த்து நின்றோம். இரட்டை இலை சின்னத்தில் அவா் வெற்றி பெற்றதில் எனக்கு மகிழ்ச்சி தான் .

1999 முதல் அறிமுகமானவா் கடம்பூா் செ. ராஜு. அதிலிருந்து நண்பா்களாக பழகி வருகிறோம்.

நாங்கள் அம்மா வளா்த்த பிள்ளைகள். இடையில் பிரிந்தோம்; தற்போது எல்லாரும் ஒற்றாகி விட்டோம்.

இத்தொகுதியில் 3 முறை ஹாட்ரிக் வெற்றி பெற்ற அவா் 4ஆவது முறையாகவும் வெற்றி பெறுவது உறுதி. அதுபோல தமிழகம் முழுவதும் அதிமுக வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்றாா் அவா்.