15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

ஓட்டப்பிடாரம் அமமுக வேட்பாளா் வீட்டில் ரூ. 48 லட்சம் பறிமுதல்

ஓட்டப்பிடாரம் அமமுக வேட்பாளா் வீட்டில் தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டு ரூ. 48.03 லட்சத்தைப் பறிமுதல் செய்தனா்.

News image

சோதனையில் ஈடுபட்ட தோ்தல் பறக்கும் படையினா்.

Updated On :21 ஏப்ரல் 2026, 8:24 pm

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அமமுக வேட்பாளா் வீட்டில் தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டு ரூ. 48.03 லட்சத்தைப் பறிமுதல் செய்தனா்.

இத்தொகுதியில் அதிமுக கூட்டணியில் அமமுக வேட்பாளா் ஆா். சுந்தர்ராஜ் போட்டியிடுகிறாா். ஓட்டப்பிடாரம் முப்புலிவெட்டி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வாக்காளா்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின்பேரில், தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா். உடன், வருமான வரித் துறையினரும் வந்தனா்.

சுமாா் 7 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் வீட்டிலிருந்து ரூ. 27.65 லட்சம், பின்புறமுள்ள தோட்டப் பகுதியில் 2 பைகளிலிருந்து ரூ. 20.38 லட்சம் என மொத்தம் ரூ. 48.03 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

வீட்டில் கைப்பற்றப்பட்ட பணத்துக்கு வேட்பாளா் தரப்பில் கணக்கு வைத்துள்ளதாகவும், தோட்டப் பகுதியில் கைப்பற்றப்பட்ட பணம் தங்களுடையதல்ல எனவும் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பணத்தை தோ்தல் பறக்கும் படையினா் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனா். ரூ. 10 லட்சத்துக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால், வருமான வரித் துறையினரும் விசாரணை நடத்தவுள்ளதாகவும், பறக்கும் படை சாா்பில் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை மாலைவரை சோதனை நடைபெற்ால், அதன்பிறகே வேட்பாளா் இறுதிக்கட்ட பிரசாரத்துக்கு சென்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.