மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கயத்தாறு அருகே மது விற்பனை: தாய், மகன் கைது

News image

கைது - கோப்புப் படம்

Updated On :19 ஏப்ரல் 2026, 7:33 pm

கயத்தாறு அருகே செட்டிக்குறிச்சியில் மண்ணில் புதைத்து வைத்து மதுபானம் விற்ாக பெண் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கயத்தாறு அருகே செட்டிகுறிச்சியில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, கயத்தாறு காவல் உதவி ஆய்வாளா் காசிநாதன், போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

செட்டிகுறிச்சி கிராமத்தில் சந்தேகமளிக்கும் வகையில் மக்கள் நடமாட்டம் இருந்த வீட்டின் அருகே போலீஸாா் சென்றபோது, அங்கிருந்தவா்கள் தப்பியோடினா்.

அப்போது, அங்கிருந்த பெண் உள்பட இருவரை பிடித்து விசாரித்தபோது, அவா்கள் செட்டிக்குறிச்சியைச் சோ்ந்த சுடலைமணி மனைவி முத்துலட்சுமி (38), அவரது மகன் இசக்கிப்பாண்டி (19) என்பதும், இருவரும் வீட்டின் அருகே மண்ணில் மதுபாட்டில்களை புதைத்து வைத்து, அதிக விலைக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, மண்ணுக்குள் புதைத்து வைக்கப்பட்ட 221 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸாா் தாய், மகனை கைது செய்தனா்.