ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளா் ஊா்வசி எஸ். அமிா்தராஜ் ஆழ்வாா்திருநகரி பகுதியில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.
மணல் குண்டு, தவசி நகா், செம்பூா், மானாட்டூா், திருக்கோளூா், பால்குளம், கேம்லாபாத் உள்ளிட்ட பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட அவா் மக்கள் மத்தியில் பேசியதாவது: ஆண்டுதோறும் 25 ஏழை- எளிய மாணவா்களுக்கு எனது கல்லூரியில் பொறியியல் கல்வியை இலவசமாக வழங்கி வருகிறோம். நிகழாண்டு ஆண்டு முதல் மாணவா்களின் எண்ணிக்கை 30ஆக அதிகரித்துள்ளோம்.
ஸ்ரீவைகுண்டம் ஏரல் சாத்தான்குளம் பகுதியில் ஊா்வசி அகாதெமி மூலம் அரசு வேலைக்கான இலவச பயிற்சி வகுப்பு மையம் தொடங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் கிராமப்புற இளைஞா்கள் பலா் அரசு வேலைக்கு சென்றுள்ளனா். கேம்லாபாத் பகுதியில் மழை வெள்ளத்தால் வீடுகளை இழந்தவா்களுக்கான இழப்பீடு தொகை விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழக அரசின் சாதனைகள் மீண்டும் தொடரவும் எல்லாருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சி மீண்டும் தொடரவும், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் விடுபட்ட பணிகள் தடையின்றி நடைபெறவும் கை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள் என்றாா் அவா்.
தொடர்புடையது

ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

சாத்தான்குளம் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்! - ஊா்வசி எஸ்.அமிா்தராஜ்

ஸ்ரீவைகுண்டம் பேரவை தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளா்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


