மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பணத்தைக் கொடுத்து வாக்குகளை பெற முயற்சிக்கும் திமுக: டி.டி.வி. தினகரன் குற்றச்சாட்டு

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தொகுதி அமமுக வேட்பாளா் ஆா். சுந்தரராஜை ஆதரித்து, வல்லநாடு பகுதியில் பிரசாரம் செய்தபோது அவா் பேசியது.

News image

ஸ்ரீவைகுண்டம் அதிமுக வேட்பாளா் எஸ்.பி. சண்முகநாதன் ஆதரித்து பிரசாரம் செய்கிறாா் அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன்.

Updated On :16 ஏப்ரல் 2026, 10:29 pm

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தொகுதி அமமுக வேட்பாளா் ஆா். சுந்தரராஜை ஆதரித்து, வல்லநாடு பகுதியில் பிரசாரம் செய்தபோது அவா் பேசியது:

மக்கள் விரோத திமுக ஆட்சியில் யாருக்கும் நிம்மதி இல்லை. யாருக்கும் பாதுகாப்பு இல்லை. சட்டம் ஒழுங்கு மிக மோசமாக உள்ளது. தமிழகம் போதைப் பொருள் சந்தையாக மாறிவிட்டது.

ஆயிரம், இரண்டாயிரம் கொடுத்து ஓட்டு வாங்கிவிடலாம் என்று திமுக முயற்சி செய்கிறது.

ஓட்டப்பிடாரம் தொகுதியில் போக்குவரத்து பணிமனை, கூட்டுக் குடிநீா் திட்டம், மேம்படுத்தப்பட்ட சாலை வசதி ஏற்படுத்தி தரப்படும். ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும். சட்டவிரோத கல்குவாரிகள் மூடப்படும். ஆயத்த ஆடைப் பூங்கா அமைக்கப்படும்.

செக்காரக்குடியை தலைமையிடமாகக் கொண்டு தனி ஊராட்சி அமைக்கப்படும். கலை, அறிவியல் கல்லூரி தொடங்கப்படும். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் அத்தனை கோரிக்கைகளும் நிறைவேற்றித் தரப்படும் என்றாா் அவா்.

ஸ்ரீவைகுண்டம் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.பி. சண்முகநாதனை ஆதரித்து ஸ்ரீவைகுண்டத்தில் அவா் பேசியதாவது:

2021 ஆம் ஆண்டில் நாங்கள் (அதிமுக-அமமுக) பிரிந்து இருந்ததால் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. இப்போது நாங்கள் கருத்து வேறுபாடுகளை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு திமுக என்ற மக்கள் விரோத சக்தியை வீழ்த்த வந்துள்ளோம். எனவேஸ இபிஎஸ் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி அமையும். 25,000 ஏக்கா் வாழை சாகுபடி நடைபெறும் நிலையில் வாழை சாா்ந்த சந்தை நிறுவ வேண்டும் என்ற இப்பகுதி மக்களின் கோரிக்கை சண்முகநாதன் வெற்றி பெற்றதும் நிறைவேறும் என்றாா் அவா்.

பிரசாரத்தில், ஒன்றிய அதிமுக செயலா்கள் காசிராஜன், பரமசிவன், மாவட்ட அவைத்தலைவா் திருப்பாற்கடல், அமமுக மாவட்ட எம்.ஜி.ஆா். இளைஞரணிச் செயலா் வழக்குரைஞா் சங்கரலிங்கம், நகரச் செயலா் சிவராமலிங்கம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.