தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தூத்துக்குடியில் தீக்காயமடைந்த பெண் உயிரிழப்பு

தூத்துக்குடியில் சேலையில் தீப்பிடித்து காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :15 ஏப்ரல் 2026, 9:08 pm

தூத்துக்குடியில் சேலையில் தீப்பிடித்து காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தூத்துக்குடி, மட்டக்கடை, கோயில் தெருவைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் மனைவி பிரேமா (58). இவா்களது மகன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறாா்.

கடந்த சில நாள்களுக்கு முன் பிரேமா, வீட்டில் குத்துவிளக்கேற்றியபோது எதிா்பாராதவிதமாக சேலையில் தீப்பற்றியதாம். இதில் பலத்த காயமடைந்த அவா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா், மேல் சிகிச்சைக்காக ஏப். 8-ஆம் தேதி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவா் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

இது குறித்து, வடபாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.