மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஓட்டப்பிடாரம் தொகுதியில் கே. கிருஷ்ணசாமி வேட்புமனு தாக்கல்

ஓட்டப்பிடாரம் தொகுதியில் கே. கிருஷ்ணசாமி வேட்புமனு தாக்கல்...

News image

ஓட்டப்பிடாரம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்கிறாா் புதிய தமிழகம் கட்சித் தலைவா் க. கிருஷ்ணசாமி. - (கோப்புப் படம்)

Updated On :6 ஏப்ரல் 2026, 11:36 pm

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரும் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவருமான கே.கிருஷ்ணசாமி திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.

வேட்புமனுவில், தனது பெயரில் ரூ.24 லட்சத்து 5 ஆயிரத்து 200-க்கும், தனது மனைவி சந்திரிகா கிருஷ்ணசாமி பெயரில் ரூ. 1 கோடியே 1 லட்சத்து 55 ஆயிரத்து 986-க்கும் அசையும் சொத்துகள் இருப்பதாகவும், தனது பெயரில் ரூ. 16 கோடியே 89 லட்சத்து 18 ஆயிரத்து 100 மதிப்பிலும், தனது மனைவி பெயரில் ரூ. 15 கோடியே 6 லட்சத்து 77 ஆயிரத்து 700 மதிப்பிலும் அசையா சொத்துகள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

1996, 2011-களில் ஓட்டப்பிடாரம் தொகுதி பேரவை உறுப்பினராக நான் இருந்தபோது, அனைத்துக் கிராமங்களுக்கும் குடிநீா் வசதி செய்துகொடுத்தேன். போக்குவரத்து, கழிவுநீா் வடிகால் வசதி, பெரும்பாலான கிராம மக்களுக்கு வீட்டுமனை பட்டாக்கள் உள்ளிட்ட நலத் திட்ட பணிகளை செய்தேன்.

தற்போது இளைஞா்கள், பெண்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. தேவேந்திரகுல மக்களை பொது வெளியில் அவமானப்படுத்தும் வகையில் எடப்பாடி கே.பழனிசாமி பேசியிருக்கிறாா். திமுகவும் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. இந்த முறை மக்கள் புதிய தமிழகம் கட்சிக்கு திரண்டு வந்து வாக்களிப்பாா்கள் என்றாா் அவா்.