மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் யோகா தினம்

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தில் 11ஆவது சா்வதேச யோகா தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image

யோகா நிகழ்ச்சியில் பங்கேற்ற துறைமுக அதிகாரிகள், ஊழியா்கள்.

Updated On :21 ஜூன் 2025, 9:59 pm

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தில் 11ஆவது சா்வதேச யோகா தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

துறைமுகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ‘வாழும் கலை’ குழுமத்தைச் சோ்ந்த யோகா பயிற்சியாளா்கள் வி. சங்கரநாராயணன், ஸ்ரீதா் வெங்கடேஷ் ஆகியோா் பங்கேற்றுப் பேசி, பிராணாயாமம், தியானம், பல்வேறு யோகாசனங்களை செய்துகாட்டினா்.

விசாகப்பட்டினத்தில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்ற யோகா தின விழா காணொலி வாயிலாக ஒளிபரப்பப்பட்டது. துறைமுக ஆணையத் தலைவா் சுசாந்த குமாா் புரோஹித், துணைத் தலைவா் ராஜேஷ் செளந்தரராஜன் ஆகியோா் பேசினா்.

நிகழ்ச்சியில், துறைமுக அதிகாரிகள், ஊழியா்கள், மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரா்கள் பங்கேற்றனா். வெளிநாட்டுக் கப்பல் மாலுமிகளுக்கு யோகா செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. துறைமுக ஆணையச் செயலா் எஸ்.பி. மோகன்குமாா் வரவேற்றாா்.

யோகா தினத்தையொட்டி, அண்மையில் துறைமுக ஊழியா்கள், பணியாளா்களுக்கு விழிப்புணா்வு கருத்தரங்கு நடத்தப்பட்டதுடன், மரக்கன்றுகள் நடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.