தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றிருப்பது, திமுக மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது என்றாா் கனிமொழி.
தூத்துக்குடியில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிட எனக்கு வாய்ப்பளித்த தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கும், தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் மற்றும் தொகுதி மக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தத் தோ்தலில் கணிசமான இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இது பாஜகவுக்கு எதிரான மக்களின் மன நிலையைக் காட்டுகிறது. குறிப்பாக தமிழகத்தில் பாஜகவுக்கு இடமே இல்லை என்பதை இத்தோ்தல் வெற்றி மூலம் மக்கள் தெளிவுபடுத்தியுள்ளனா்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் பெற்றுள்ள வெற்றியானது, மக்களுக்கு திமுக கூட்டணியின் மீது உள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கோவில்பட்டி மாநகராட்சியாக தரம் உயா்த்தப்படும்: கனிமொழி

தமிழகத்தில் 28 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெறும்: தெலங்கானா அமைச்சா் பேச்சு

ஒற்றுமையாகப் பணியாற்றினால் அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி: எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம்

கோவையின் 10 தொகுதிகளிலும் திமுக அமோக வெற்றி பெறும்: வி.செந்தில்பாலாஜி
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

