நவம்பா் மாதம் முதல் மாா்ச் மாதம் வரையிலான நெல் சாகுபடி பிசானம் என்றும், மாா்ச் முதல் ஜூன் மாதம் வரையிலான நெல் சாகுபடி முன் குறுவை சாகுபடி என்றும், ஜூன் மாதம் முதல் செப்டம்பா் மாதம் வரையிலான சாகுபடி குறுவை சாகுடி என்றும் அழைக்கப்படுகிறது. குறுவை, முன் குறுவை, பிசானம் என முப்போகம் நெல் விளைச்சல் இருந்து வந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பிசான சாகுபடி மட்டுமே அதிகளவில் நடைபெற்று வருகிறது. போதிய தண்ணீா் கிடைக்காத நிலையில் கிணற்று நீா் மூலம் குறுவை மற்றும் முன் குறுவை சாகுபடி பெயரளவுக்கு நடைபெறுகிறது.