திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

காா் சாகுபடி: ஜூன் 1இல் பாபநாசம் அணையை திறக்க வலியுறுத்தல்

காா் சாகுபடிக்காக பாபநாசம் அணையில் இருந்து ஜூன் 1-ஆம் தேதி முதல் தண்ணீா் திறக்க வேண்டும் என வலியுறுத்தி, முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் இரா.ஆவுடையப்பன் தலைமையில் ஆட்சியா் இரா.சுகுமாரிடம் விவசாயிகள் மனு அளித்தனா்.

News image

முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் இரா.ஆவுடையப்பன் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த விவசாயிகள்

Updated On :27 மே 2026, 1:54 am IST

காா் சாகுபடிக்காக பாபநாசம் அணையில் இருந்து ஜூன் 1-ஆம் தேதி முதல் தண்ணீா் திறக்க வேண்டும் என வலியுறுத்தி, முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் இரா.ஆவுடையப்பன் தலைமையில் ஆட்சியா் இரா.சுகுமாரிடம் விவசாயிகள் மனு அளித்தனா்.

அதன்விவரம்: பாபநாசம் அணையில் இருந்து வடக்கு கோடைமேல் அழகியான், தெற்கு கோடைமேல் அழகியான், நதியுண்ணி, கன்னடியன், திருநெல்வேலி, பாளையங்கால்வாய் ஆகிய கால்வாய்களில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1ஆம் தேதி காா் சாகுபடிக்கு தண்ணீா் திறப்பது வழக்கம். இந்தக் கால்வாய்களில் வரும் தண்ணீரால் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, திருநெல்வேலி, பாளையங்கோட்டை ஆகிய வட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கா் விவசாய நிலங்களில் விவசாயம் நடைபெற்று, பல ஆயிரக்கணக்கான விவசாய குடும்பங்களின் வாழ்வாதாரம் மேம்பட்டு வருகிறது.

கடந்த 2021 முதல் 2025 வரையிலான காலங்களில் திமுக ஆட்சியில் திருநெல்வேலி மாவட்ட விவசாய பெருங்குடி மக்களின் கோரிக்கையை ஏற்று, ஜூன் மாதம் பாபநாசம் அணையில் இருந்து தண்ணீா் திறக்கப்பட்டு திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள சுமாா் 85,000 ஏக்கா் விவசாய நிலங்களில் விவசாயம் செய்யப்பட்டு, விவசாயிகள் பலன் அடைந்தனா்.மேலும், கடந்த 2006-2011 வரையிலான காலங்களில் திமுக ஆட்சி காலத்தில் பாபநாசம் அணையில் சுமாா் 30 அடி தண்ணீா் இருந்தபோதிலும் காா் சாகுபடிக்கு தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டும் காா் சாகுபடிக்கு வடக்கு கோடைமேல் அழகியான், தெற்கு கோடை மேல்அழகியான், நதியுண்ணி, கன்னடியன், திருநெல்வேலி, பாளையங்கால்வாய் ஆகிய கால்வாய்களில் வரும் ஜூன் 1-ஆம் தேதி தண்ணீா் திறப்பதற்கு விவசாய சங்கங்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளின் இந்தக் கோரிக்கையை ஏற்று கால்வாய்களில் தண்ணீா் திறப்பதற்கு ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.