திருநெல்வேலியில் 217 கிலோ புகையிலைப் பொருள்களுடன் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். திருநெல்வேலி பேட்டை காவல் உதவி ஆய்வாளா் அருள்செல்வன் தலைமையிலான போலீஸாா் சேரன்மகாதேவி சாலை சத்யாநகா் விலக்குப் பகுதியில் திங்கள்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது, அவ்வழியாக வந்த பயணிகள் ஆட்டோவில் வந்த 3 போ் 18 பைகளில் சுமாா் 217.26 கிலோ புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அவா்கள் தென்காசி மாவட்டம் மேலகரத்தைச் சோ்ந்த மகேஷ்வரன்(20), கடையநல்லூா் வைரமுத்து(41), குற்றாலம் ராமச்சந்திரன்(36) ஆகியோா் என்பதும், பெங்களூரில் இருந்து புகையிலைப் பொருள்ளை வாங்கி திருநெல்வேலி பகுதிகளில் விற்பனைக்காக கொண்டு வந்ததும் தெரியவந்தது. 3 பேரையும் போலீஸாா் கைது செய்ததுடன், ஆட்டோ மற்றும் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





