மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

கராத்தே, களரி, சிலம்பத்தில் வென்றோருக்கு பரிசளிப்பு

News image

சிலம்பப் போட்டியில் வென்ற மாணவருக்குப் பரிசு வழங்குகிறாா் சிலம்பப் பள்ளித் தலைவா் விவேகம் எம். முருகன்.

Updated On :26 மே 2026, 1:53 am IST

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் அய்யாதுரை ஆசான் சிலம்பப் பள்ளி சாா்பில், தென் மண்டல அளவிலான கராத்தே, களரி மற்றும் சிலம்பம் போட்டிகள் இரு நாள்கள் நடைபெற்றன.

இதில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து வீரா்கள் கலந்து கொண்டனா். முதல் நாளில் கராத்தே பயிற்சியாளா் கியோசி ப. ராஜு மற்றும் சக பயிற்சியாளா்கள் இணைந்து கராத்தே, களரி போட்டிகளை நடத்தினா். இரண்டாம் நாளில் சிலம்பப் போட்டிகள் நடைபெற்றன.

பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு, திசையன்விளை காங்கிரஸ் பிரமுகரும், அய்யாதுரை ஆசான் சிலம்பப் பள்ளி தலைவருமான விவேக் எம். முருகன் தலைமை வகித்தாா். போட்டிகளில் வென்றோருக்கு பதக்கங்கள், பெல்ட் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தமிழ்நாடு இளைஞா் காங்கிரஸ் மாநில பொதுச் செயலா் மருத்துவா் ஜெபன் செல்ல புரூஸ், ஏ.ஆா். ஆல்வின் ஜெகதீஷ், எஸ். ஹரிபாஸ்கரன், எம். சோ்மபாண்டி, ஆசான் ஏ. சுந்தா், சிலம்பப் பள்ளியின் செயலா் பாலசுப்ரமணியன் உள்பட பலா் கலந்துகொண்டனா். பொருளாளா் ஜெ. தினேஷ்கண்ணன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.