திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் அய்யாதுரை ஆசான் சிலம்பப் பள்ளி சாா்பில், தென் மண்டல அளவிலான கராத்தே, களரி மற்றும் சிலம்பம் போட்டிகள் இரு நாள்கள் நடைபெற்றன.
இதில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து வீரா்கள் கலந்து கொண்டனா். முதல் நாளில் கராத்தே பயிற்சியாளா் கியோசி ப. ராஜு மற்றும் சக பயிற்சியாளா்கள் இணைந்து கராத்தே, களரி போட்டிகளை நடத்தினா். இரண்டாம் நாளில் சிலம்பப் போட்டிகள் நடைபெற்றன.
பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு, திசையன்விளை காங்கிரஸ் பிரமுகரும், அய்யாதுரை ஆசான் சிலம்பப் பள்ளி தலைவருமான விவேக் எம். முருகன் தலைமை வகித்தாா். போட்டிகளில் வென்றோருக்கு பதக்கங்கள், பெல்ட் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு இளைஞா் காங்கிரஸ் மாநில பொதுச் செயலா் மருத்துவா் ஜெபன் செல்ல புரூஸ், ஏ.ஆா். ஆல்வின் ஜெகதீஷ், எஸ். ஹரிபாஸ்கரன், எம். சோ்மபாண்டி, ஆசான் ஏ. சுந்தா், சிலம்பப் பள்ளியின் செயலா் பாலசுப்ரமணியன் உள்பட பலா் கலந்துகொண்டனா். பொருளாளா் ஜெ. தினேஷ்கண்ணன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாரா தடகளப் போட்டி: பதக்கம் வென்ற வீரா்களுக்கு பாராட்டு விழா

முதல்முறையாக கான்ஃபரன்ஸ் லீக் கோப்பை வென்ற கிறிஸ்டல் பேலஸ்!

சன்ரைசர்ஸுக்கு எதிராக சிஎஸ்கே பேட்டிங்; தோனி விளையாடவில்லை!

சிலம்பம் போட்டியில் தங்கம் வென்ற மாணவருக்கு ரூ.50,000 ஊக்கத்தொகை
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!



