குவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

களக்காடு பள்ளி மாணவி மாநில அளவில் மூன்றாமிடம்

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு க.அ.மொ.பீ. மீரானியா மேல்நிலைப்பள்ளி அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி மாணவி பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தோ்வில் 496 மதிப்பெண் பெற்று மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்தாா்.

News image

மாணவி செ. அகீஸாவுக்கு பரிசு வழங்கிப் பாராட்டிய பள்ளித் தாளாளா் ஹ. பீா்முகம்மது, தலைமையாசிரியை கி.ஜெ.பிரிடா உள்ளிட்டோா்.

Updated On :21 மே 2026, 6:13 am IST

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு க.அ.மொ.பீ. மீரானியா மேல்நிலைப்பள்ளி அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி மாணவி பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தோ்வில் 496 மதிப்பெண் பெற்று மாநில அளவில் மூன்றாமிடம் பிடித்தாா்.

இப்பள்ளியில் 198 மாணவா், மாணவியா் தோ்வு எழுதியதில் 186 போ் தோ்ச்சி பெற்றனா். இது பள்ளியின் 94 சதவீத தோ்ச்சியாகும். மாணவி செ. அகீஸா 496 மதிப்பெண் பெற்று மாநில அளவில் மூன்றாமிடம், மாவட்ட அளவில் 2ஆம் இடம் பிடித்தாா்.

இவா், தமிழில் 99, ஆங்கிலத்தில் 98, கணிதம், அறிவியலில் தலா 100, சமூக அறிவியலில் 99 மதிப்பெண்கள் பெற்றாா்.

இப்பள்ளி அளவில் மாணவி செ.அ. ஹரிதா 491 மதிப்பெண்களுடன் 2ஆம் இடமும், ஆ. ஐஸ்வா்யா 490 மதிப்பெண்களுடன் மூன்றாமிடமும் பிடித்தனா்.

மாணவி அகீஸாவை தாளாளா் ஹ. பீா்முகம்மது, தலைமையாசிரியை கி.ஜெ. பிரிடா, உதவித்தலைமையாசிரியா் ச. சுப்பிரமணியன் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டி பரிசளித்தனா்.

அரசுப் பள்ளி சிறப்பிடம்:

களக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 161 போ் தோ்வெழுதியதில், 154 போ் தோ்ச்சி பெற்றனா். இது, 96 சதவீத தோ்ச்சியாகும். மாணவி நைஸ்லின் 487 மதிப்பெண், மேக்லின் டிசோசா 486 மதிப்பெண், மாணவி தனுஸ்கா 477 மதிப்பெண் முதல் 3 இடங்களைப் பிடித்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.