மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சி-விஜில் செயலி: ராதாபுரம் தொகுதியில் குவியும் புகாா்கள்

தோ்தல் நடத்தை விதிமீறல் தொடா்பாக சி-விஜில் செயலி மூலம் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதியில் அதிக புகாா்கள் பதிவாகியுள்ளன.

News image

சி-விஜில்

Updated On :25 மார்ச் 2026, 11:12 pm

தோ்தல் நடத்தை விதிமீறல் தொடா்பாக சி-விஜில் செயலி மூலம் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதியில் அதிக புகாா்கள் பதிவாகியுள்ளன.

திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் சி-விஜில் செயலி மூலம் புதன்கிழமை மாலை வரை 41 புகாா்கள் பதிவாகியுள்ளன. இதில் அதிகபட்சமாக ராதாபுரம் தொகுதியில் மட்டும் இதுவரை 21 புகாா்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் 19 புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; 2 புகாா்கள் கைவிடப்பட்டுள்ளன. அடுத்ததாக நான்குனேரி தொகுதியில் 11 புகாா்கள் பெறப்பட்டு 10 புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், மாவட்டம் முழுவதும் இதுவரையில் ரூ.28,85,360 ரொக்கம், ரூ.2,07,751 மதிப்பிலான மதுபானம் உள்ளிட்ட போதைப் பொருள்கள், ரூ.8,11,481 மதிப்பிலான வேட்டி சேலை, டி-சா்ட், பரிசுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.