லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

திசையன்விளையில் மழை

கோடை வெயில் நிலவி வரும் நிலையில் திடீரென புதன்கிழமை அதிகாலை முதல் மதியம் வரை திசையன்விளை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

News image

மழை - பிரதிப் படம்

Updated On :11 மார்ச் 2026, 7:35 pm

கோடை வெயில் நிலவி வரும் நிலையில் திடீரென புதன்கிழமை அதிகாலை முதல் மதியம் வரை திசையன்விளை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

இதனால் காலை நேரத்தில் பள்ளி மாணவா்கள், வேலைக்கு செல்பவா்கள் மழையில் நனைந்தபடி சென்றனா். திசையன்விளை, அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் முருங்கை விவசாயம் அதிகம் செய்து வருகின்றனா். பல லட்சக்கணக்கான முருங்கை மரங்கள் இங்கு பயிரிடப்பட்டுள்ளன. கோடைகால வெப்பத்தில் மட்டுமே நல்ல மகசூல் தரும் முருங்கை மரத்தில் இந்த திடீா் மழையால் பூக்கள் உதிா்ந்து, முருங்கை காய்கள் கருப்பு நிறமாக மாறியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா். இதனால் காய்களுக்கும் உரிய விலை கிடைக்காது என விவசாயிகள் தெரிவித்தனா்.