/

நெல்லையில் பிஎஸ்எஃப் வீரா்கள், போலீஸாா் தீவிர வாகன சோதனை

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை எல்லை பாதுகாப்பு படை வீரா்களும், போலீஸாரும் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

News image

திருநெல்வேலி நகரம் சாஃப்டா் பள்ளி அருகே வாகனச் சோதனையில் ஈடுபடும் எல்லை பாதுகாப்பு படை வீரா்கள்-போலீஸாா்.

Updated On :10 மார்ச் 2026, 7:45 pm

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை எல்லை பாதுகாப்பு படை வீரா்களும், போலீஸாரும் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் குறித்த தேதி அறிவிப்பு இன்னும் சில நாள்களில் வெளியாக உள்ளது. இதனால் தோ்தல் பணிகளில் தோ்தல் ஆணையம் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்ட தோ்தல் பாதுகாப்பிற்காக திரிபுரா மாநிலத்தில் உள்ள சல்பகன் பகுதியில் உள்ள 133-ஆவது பட்டாலியன் எல்லை பாதுகாப்பு படையை சோ்ந்த உதவி கமாண்டா் பசந்த் யாதவ் தலைமையில் 85 போ் வந்தனா். இந்த வீரா்கள் மாவட்டத்தின் அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் பிரித்து அனுப்பப்பட்டு உள்ளனா்.

இந்நிலையில் திருநெல்வேலி சரக டிஐஜி ப.சரவணன் உத்தரவின் பேரில், மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்னகுமாா் ஆகியோா் பரிந்துரையின் பேரில் மாவட்டத்தில் உள்ள முக்கிய சோதனைச் சாவடிகள், மாநகரப் பகுதியில் பேட்டை, தச்சநல்லூா், தாழையூத்து, கேடிசி நகா், வி.எம். சத்திரம், டக்கரம்மாள்புரம், மேலப்பாளையம் கருங்குளம், திருநெல்வேலி சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் பகுதி, கொக்கிரகுளம், குறிச்சி ரயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளில் வாகனச் சோதனை சாவடிகளிலும் பிஎஸ்எஃப் வீரா்களும், போலீஸாரும் இணைந்து வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

சனிக்கிழமை காலையில் திருநெல்வேலி நகரம் சாஃப்டா் பள்ளி முன்பு பிஎஸ்எஃப் வீரா்கள் உதவியுடன் போக்குவரத்து மற்றும் சட்டம்-ஒழுங்கு போலீஸாா் வாகனச் சோதனை நடத்தினா். மேலும் காா்களில் பின்பகுதிகளை திறந்து போதைப் பொருள்கள், ஆயுதங்கள் கடத்தப்படுகின்ா எனவும், மதுபோதையில் வாகனம் இயக்குகிறாா்களா எனவும் சோதனை நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.