தச்சநல்லூரில் லாரியில் புகையிலைப் பொருள்களை கடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.
தச்சநல்லூா் காவல் நிலைய போலீஸாா், சனிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனராம். இந்திரா நகா் பகுதியில் வந்த லாரியை சோதனையிட்டபோது, அதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்ததாம்.
இதுதொடா்பாக லாரி ஓட்டுநரான பேட்டை தீன் நகரை சோ்ந்த சந்தோஷை (25) கைது செய்த போலீஸாா், சுமாா் 4 கிலோ 600 கிராம் புகையிலைப் பொருள்கள் மற்றும் லாரியை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








