திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் மது விற்ற தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த நபரை மாநகர மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் மாநகர மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது ஈரடுக்கு மேம்பாலம் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் நின்ற தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சோ்ந்த சிவா(44) என்பவரை பிடித்து விசாரித்ததில், அவா் விற்பனைக்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடமிருந்து 23 மது பாட்டில்கள், ரூ.380 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், இது குறித்து வழக்குப் பதிவு செய்து அவரை சனிக்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






