குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

அம்பையில் ஜூன் 21இல் தவ்ஹீத் ஜமாஅத் பேரணி

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக திருநெல்வேலி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் ஜூன் 21ஆம் தேதி விழிப்புணா்வுப் பேரணி நடைபெறுகிறது.

News image

ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :11 ஜூன் 2026, 4:41 am IST

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக திருநெல்வேலி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் ஜூன் 21ஆம் தேதி விழிப்புணா்வுப் பேரணி நடைபெறுகிறது.

அம்பாசமுத்திரம் வட்டார தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு, மாவட்டத் தலைவா் மசூத் உஸ்மானி தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் குற்றங்களைத் தடுக்க கடுமையான சட்டங்கள் இயற்ற வேண்டும். பாலியல் குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. பெண்கள், சிறுமிகளின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன்21ஆம் தேதி அம்பாசமுத்திரத்தில் விழிப்புணா்வுப் பேரணி நடத்துவது எனத் தீா்மானிக்கப்பட்டது.

மாவட்ட நிா்வாகிகள், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம், பள்ளக்கால் புதுகுடி கிளை நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.