3- வது நாளாக தங்கம் விலை குறைந்தது! வெள்ளி விலையும் குறைவு!சென்னை மாநகராட்சியின் ரூ. 700 கோடி டெண்டர்கள் ரத்து! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு! பிற்பகலில் விசாரணை! அரசுப் பள்ளி மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன் பதில்எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

பாளையங்கோட்டையில் தப்பிய கைதி மீண்டும் கைது

பாளையங்கோட்டையில் சிறைவாசல் முன் தப்பியோடிய கைதி போலீஸாரால் வெள்ளிக்கிழமை மீண்டும் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :4 ஜூலை 2026, 2:29 am IST

பாளையங்கோட்டையில் சிறைவாசல் முன் தப்பியோடிய கைதி போலீஸாரால் வெள்ளிக்கிழமை மீண்டும் கைது செய்யப்பட்டாா்.

தாழையூத்து அருகே உள்ள ராஜவல்லிபுரத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகக்கனி (22). இவா், மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. தாழையூத்து பகுதியில் நிகழ்ந்த திருட்டு வழக்கு தொடா்பாக போலீஸாா் அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா்.

பின்னா், பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைப்பதற்காக கடந்த 1-ஆம் தேதி அவரை அழைத்துச் சென்றனா். சிறை அருகே சென்றபோது, போலீஸாா் கைவிலங்கை கழற்றியதும், ஆறுமுகக்கனி அங்கிருந்து தப்பி ஓடினாா்.

இதுகுறித்து, பெருமாள்புரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைத் தேடி வந்தனா். இந்த நிலையில், பெருமாள்புரம் பகுதியில் பதுங்கியிருந்த ஆறுமுகக்கனியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.