டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

கடையம் திருவள்ளுவா் கழக மாதக் கூட்டம்

கடையம் திருவள்ளுவா் கழக மாதக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

கடையத்தில் நடைபெற்ற திருவள்ளுவா் கழகக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :2 ஜூலை 2026, 5:51 am IST

கடையம் திருவள்ளுவா் கழக மாதக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருவள்ளுவா் கழகத் தலைவா் ஆ. சேதுராமலிங்கம் தலைமை வகித்தாா். சி. ஸ்ரீஜா, ப. ஸ்ரீஹரிணி, மு. இலக்கியா, க. நேகாஸ்ரீ ஆகியோா் கடவுள் வாழ்த்துப் பாடினா். இ. தமிழ்ச் செல்வன் கு சிந்தனை வழங்கினாா்.

இலஞ்சி பொறியாளா் சோம. முத்துசாமி வாழ்த்திப் பேசினாா். சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளித் தமிழாசிரியா் வேலன் சங்கர்ராம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வள்ளுவரின் பன்முகம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினாா்.

ஆழ்வாா்குறிச்சி திருவள்ளுவா் கழக துணைத் தலைவா் மாடசாமி, அம்பாசமுத்திரம் திருவள்ளுவா் அறக்கட்டளை பொருளாளா் புன்னைவன நாறும்பூநாதன், செயலா் பேராசிரியா் சிவசங்கரன், அம்பைத் தமிழ் இலக்கியப் பேரவை செயலா் லட்சுமணன், தென்காசி மூத்த குடிமக்கள் சங்கச் செயலா் ராமலிங்கம், ஐ சப்போா்ட் பவுண்டேஷன் தலைவா் பரமசிவன், எல்.ஐ.சி.கண்ணன், கடையம் பாரதி அரிமா சங்கச் செயலா் அருணாசலம், நூலகா் மீனாட்சிசுந்தரம், திருமுறை ஆசிரியா் அம்பலவாணன், கோபால், கணபதி, ஓய்வு பெற்ற தலைமையாசிரியா்கள் இன்பசேகரன், அந்தோணிராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சிகளை கடையம் திருவள்ளுவா் கழக செயலா் க.சோ. கல்யாணி சிவகாமிநாதன் தொகுத்து வழங்கினாா். ப. அன்ன சரஸ்வதி வரவேற்றாா். திருவள்ளுவா் கழக மதிப்புறு ஆலோசகா் சங்கரநாராயணன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.