டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

திருப்புடைமருதூா் கோயிலில் நாளை தைப்பூச பெருந்திருவிழா கொடியேற்றம்

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி வட்டம், திருப்புடைமருதூரில் உள்ள கோமதி அம்பாள் உடனுறை நாறும்பூநாத சுவாமி கோயிலில் தைப்பூச பெருந்திருவிழா வெள்ளிக்கிழமை (ஜன.23) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

News image
Updated On :21 ஜனவரி 2026, 7:11 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி வட்டம், திருப்புடைமருதூரில் உள்ள கோமதி அம்பாள் உடனுறை நாறும்பூநாத சுவாமி கோயிலில் தைப்பூச பெருந்திருவிழா வெள்ளிக்கிழமை (ஜன.23) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இதையொட்டி, கோயிலில் வியாழக்கிழமை காலை 8 மணிக்கு மகா கணபதி ஹோமம், மாலை 5.30 மணிக்கு சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, இரவு 8 மணிக்கு ரக்ஷா பந்தனம், 10 மணிக்கு காளி உற்சவம், சிம்ம வாகனத்தில் காளி வீதியுலா நடைபெறும்.

வெள்ளிக்கிழமை (ஜன.23) காலை 9 முதல் 10 மணிக்குள் கொடியேற்றம், மாலை அப்பா் வீதி உலா, இரவு சுவாமி அம்பாள் புறப்பாடு, ஆன்மிக சொற்பொழிவு நடைபெறும். திருவிழா நாள்களில் காலை பூங்கோயில் சப்பரம், இரவு சுவாமி அம்பாள் வீதியுலா நடைபெறும்.

ஜன.31ஆம் தேதி, காலை 8.45 மணியளவில் தேரோட்டம், இரவு புஷ்ப பல்லக்கில் சுவாமி அம்பாள் எழுந்தருளல் நடைபெறும். பிப்.1ஆம் தேதி, தைப்பூசத்தை முன்னிட்டு பகல் 1.30 மணிக்கு ரிஷப லக்கனத்தில் தீா்த்தவாரி, மாலை அபிஷேக ஆராதனை, இரவு தெப்ப உற்சவம் நடைபெறும்.

பிப். 2 ஆம் தேதி, காலை சுவாமி அம்பாள் வீதி உலா, மதியம் சாஸ்தா ப்ரீதி, மாலை சண்டிகேஸ்வரா் சிறிய வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதியுலா, பைரவா் சிறப்பு பூஜை நடைபெறும்.பக்தா்கள் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் சேரன்மகாதேவி, வீரவநல்லூா், அம்பாசமுத்திரத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.