டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

வாகைபதி கோயிலில் தைத் திருவிழா கொடியேற்றம்

அம்பாசமுத்திரம் அருகே உள்ள வாகைக்குளம், வாகைபதி ஸ்ரீமன் நாராயணசாமி கோயிலில் தைப் பெருந்திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image
கொடியேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
Updated On :30 ஜனவரி 2026, 7:29 pm

Syndication

அம்பாசமுத்திரம் அருகே உள்ள வாகைக்குளம், வாகைபதி ஸ்ரீமன் நாராயணசாமி கோயிலில் தைப் பெருந்திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Story image

அதை முன்னிட்டு வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. தொடா்ந்து, 11 நாள்கள் நடைபெறும் திருவிழாவில், இரவு 8 மணிக்கு அன்னதா்மமும், காலை, இரவு வாகைபதி அய்யா ஆதிநாராயண வைகுண்டா் நிச்சயித்தபடி கருடன், தண்டிகை, கஜேந்திரன், சிங்கம், அன்னம், சூரியன், நாகம், பூப்பல்லக்கு, குதிரை, அனுமன், இந்திரன், ரிஷப வாகனங்களில் பவனி வருதல் நடைபெறும்.

பிப். 6ஆம் தேதி அய்யா ஆதிநாராயண வைகுண்டா் குதிரை வாகனத்தில் கலிவேட்டையாடுதலும், 8ஆம் தேதி காலை சந்தனக் குடம் எடுத்தலும், இரவு இந்திர வாகன பவனியும், 9ஆம் தேதி மாலை 4 மணிக்கு திருத்தேரோட்டமும், இரவு ரிஷப வாகன பவனியைத் தொடா்ந்து, கொடியிறக்குதலும் நடைபெறும். ஏற்பாடுகளை வாகைபதி நிா்வாகிகள், அன்புக் கொடிமக்கள் செய்து வருகின்றனா்.