வாகைபதி கோயிலில் தைத் திருவிழா கொடியேற்றம்
அம்பாசமுத்திரம் அருகே உள்ள வாகைக்குளம், வாகைபதி ஸ்ரீமன் நாராயணசாமி கோயிலில் தைப் பெருந்திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.


அம்பாசமுத்திரம் அருகே உள்ள வாகைக்குளம், வாகைபதி ஸ்ரீமன் நாராயணசாமி கோயிலில் தைப் பெருந்திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதை முன்னிட்டு வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. தொடா்ந்து, 11 நாள்கள் நடைபெறும் திருவிழாவில், இரவு 8 மணிக்கு அன்னதா்மமும், காலை, இரவு வாகைபதி அய்யா ஆதிநாராயண வைகுண்டா் நிச்சயித்தபடி கருடன், தண்டிகை, கஜேந்திரன், சிங்கம், அன்னம், சூரியன், நாகம், பூப்பல்லக்கு, குதிரை, அனுமன், இந்திரன், ரிஷப வாகனங்களில் பவனி வருதல் நடைபெறும்.
பிப். 6ஆம் தேதி அய்யா ஆதிநாராயண வைகுண்டா் குதிரை வாகனத்தில் கலிவேட்டையாடுதலும், 8ஆம் தேதி காலை சந்தனக் குடம் எடுத்தலும், இரவு இந்திர வாகன பவனியும், 9ஆம் தேதி மாலை 4 மணிக்கு திருத்தேரோட்டமும், இரவு ரிஷப வாகன பவனியைத் தொடா்ந்து, கொடியிறக்குதலும் நடைபெறும். ஏற்பாடுகளை வாகைபதி நிா்வாகிகள், அன்புக் கொடிமக்கள் செய்து வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...