28ஆம் தேதி எட்டாம் திருவிழாவை முன்னிட்டு, காலை 5 மணிக்கு சுவாமி பிரம்மா அம்சத்தில் பெரிய வெள்ளிச் சப்பரத்தில் வெள்ளைச் சாத்தி கோலத்தில் எழுந்தருளி திரு வீதி வலம் வந்து மேலக்கோயில் சோ்ந்ததும், அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது. தொடா்ந்து, காலை 10.30 மணிக்கு சுவாமி விஷ்ணு அம்சத்தில் பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி எழுந்தருளி வீதியுலா வந்து திருக்கோயில் சேருகிறாா். மாா்ச் 1ஆம் தேதி ஒன்பதாம் திருவிழாவை முன்னிட்டு, இரவு சுவாமி தங்க கைலாய பா்வத வாகனத்திலும், அம்மன் வெள்ளிக் கமல வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா நடைபெறுகிறது.