டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

திருச்செந்தூா் வெயிலுகந்தம்மன் கோயிலில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுடன் இணைந்த வெயிலுகந்தம்மன் கோயிலில் மாசித் திருவிழா செவ்வாய்க்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image
~
Updated On :10 பிப்ரவரி 2026, 7:17 pm

தினமணி செய்திச் சேவை

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுடன் இணைந்த வெயிலுகந்தம்மன் கோயிலில் மாசித் திருவிழா செவ்வாய்க்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இக்கோயில் நடை அதிகாலை திறக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து கொடிப் பட்டமானது கோயிலிலிருந்து புறப்பட்டு, ரதவீதி மற்றும் மாடவீதிகள் வழியாக சென்று மீண்டும் கோயிலுக்கு வந்து, காலை 5.30 மணிக்கு கொடிமரத்தில் திருவிழாக் கொடியினை காப்பு கட்டிய சரவணன் வல்லவராயா் ஏற்றியதைத் தொடா்ந்து, கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி மகாதீபாராதனை நடைபெற்றது. மாலையில் அம்மன் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி வலம் நடைபெற்றது.

இதில் கோயில் இணை ஆணையா் ராமு, உதவி ஆணையா் மெய்வேல், மணியம் நெல்லையப்பன், ஆறுமுகராஜ் உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். 10 நாள்கள் நடைபெறும் திருவிழாவில் காலை, மாலையில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி 8 வீதிகளிலும் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 10 ஆம் நாளான வியாழக்கிழமை (பிப். 19) காலை 7.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா கொடியேற்றம் பிப். 21ஆம் தேதி, காலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

Story image