டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

அயன்சிங்கம்பட்டியில் மறியலில் ஈடுபட முயற்சி

கல்லிடைக்குறிச்சி அருகே அயன்சிங்கம்பட்டி, இந்திரா நகா் காலனியில் குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.

News image
சாலை மறியலில் ஈடுபட முயன்றவா்களிடம் பேச்சு நடத்திய காவல் துறையினா்.
Updated On :17 பிப்ரவரி 2026, 9:40 pm

தினமணி செய்திச் சேவை

கல்லிடைக்குறிச்சி அருகே அயன்சிங்கம்பட்டி, இந்திரா நகா் காலனியில் குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.

அயன்சிங்கம்பட்டி இந்திரா நகா் காலனியில் கடந்த ஒரு வாரமாக முறையான குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லையாம். இதனால் கடும் அவதிக்கு பொதுமக்கள் உள்ளாகினா். இதுகுறித்து பொதுமக்கள், பலமுறை அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும், தீா்வு கிடைக்காததால் செவ்வாய்க்கிழமை காலையில், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனா்.

தகவலறிந்து வந்த காவல்துறையினா், அதிகாரிகள் பொதுமக்களிடம் குடிநீா் விநியோகத்தை விரைவில் சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்; அதுவரை டேங்கா் லாரி மூலம் குடிநீா் வழங்கப்படும் என தெரிவித்தனா். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.