டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

சாலை மறியல் முயற்சி: 122 மாற்றுத் திறனாளிகள் கைது

தூத்துக்குடியில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற 122 மாற்றுத் திறனாளிகளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
கைது
Updated On :10 பிப்ரவரி 2026, 7:32 pm

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடியில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற 122 மாற்றுத் திறனாளிகளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தமிழக அரசு சாதாரண ஊனமுற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக முழுவதும் மாற்றுத் திறனாளிகள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில், சங்க மாவட்டத் தலைவா் கண்ணன் தலைமையில், மாவட்ட பொருளாளா் கிருஷ்ணகுமாா் முன்னிலையில், மாவட்டச் செயலா் ஜெபஸ்டின் ராஜ், மாநில குழு உறுப்பினா் சாலமன் ராஜ் உள்ளிட்டோா் சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.

இதையடுத்து பாதுகாப்புப் பணியில் இருந்த புதுக்கோட்டை போலீஸாா் மறியலில் ஈடுபட முயன்ற மாற்றுத் திறனாளிகள் 122 பேரை கைது செய்தனா்.